×

தமிழகத்தில் மேலும் 790 பேருக்கு கொரோனா; 8 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.24 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை (8,24,776) 8 லட்சத்து 24 ஆயிரத்து 776 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  * தமிழகத்தில் மேலும் 790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.* இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,24,776 ஆக அதிகரித்துள்ளது.* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 897 பேர் குணமடைந்துள்ளனர்.* இதன் மூலம் மொத்தம் 8,05,136 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.* இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,208 ஆக உயர்ந்துள்ளது.* அரசு மருத்துவமனையில் 5; தனியார் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.* சென்னையில் இன்று ஒரே நாளில் 208 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.* சென்னையில் மொத்தம் 2,27,353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை 1,46,95,106 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* இன்று மட்டும் 64,231 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* தமிழகத்தில் தற்போது 7,432 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,98,518 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 479 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,26,224 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 311 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 245 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* அரசு மையங்கள் 68; தனியார் மையங்கள் 177.* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.*UAE-2* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை….

The post தமிழகத்தில் மேலும் 790 பேருக்கு கொரோனா; 8 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.24 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து